tamilnadu

img

17 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா இன்று நிறைவு

திருப்பூர், பிப். 8- 17ஆவது திருப்பூர் புத்தகத் திரு விழா 2020 ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறுகிறது. பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்த காலயம் இணைந்து திருப்பூரில் நடத்தி வரும் பண்பாட்டுத் திருவிழாவான திருப்பூர் புத்தகத் திருவிழா 17ஆவது ஆண்டாக இந்த ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கியது. கடந்த பத்து நாட்களாக சிறப்பான முறையில் நடைபெற்று வந்தது. பல்லாயிரக் கணக்கான மக்கள், குறிப்பாக இளை ஞர்கள், மாணவர்கள், பெண்கள், சிறார் கள் ஆர்வத்துடன் இங்கு வந்து கண் காட்சியைப் பார்வையிட்டு புத்த கங்களை வாங்கிச் சென்றனர். ஒவ்வொரு நாளும் காலை அறிவியல் அரங்க நிகழ்வுகளில் மாணவர்கள் பங்கேற்றனர். மாலை நேர நிகழ்வு களாக கலை நிகழ்ச்சிகள், கருத்த ரங்கம், நாடகம், கதை சொல்லல், திற னாய்வு போட்டிகளில் வெற்றி பெற்றோ ருக்கு பரிசளிப்பு, திருப்பூர் தமிழ்ச் சங்க பரிசளிப்பு ஆகியவை மக்கள் பங்கேற்பு டன் சிறப்பாக நடைபெற்றன. சனியன்று மாலை நிகழ்வாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி நடை பெற்றது. ஏற்றம் தருமா தாக்கல் செய் யப்பட்ட பட்ஜெட் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த விவாத நிகழ்வு ஆயிர க்கணக்கான மக்கள் பங்கேற்புடன் கண் காட்சி வளாகம் நிறைந்து காணப்பட்டது. இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை பேராசிரியர் அப்துல்காதரின் பட்டிமன்றம் நடைபெறுகிறது.